உடல்நலம் குன்றிய அன்வாரை வீட்டுக்காவலில் வைக்க வழக்குரைஞர்கள் முயற்சி

illஅன்வார்  இப்ராகிமைச்  சிறையிலிருந்து  அகற்றி வீட்டுக்காவலில் வைக்க வேண்டும்  என  அவரின்  வழக்குரைஞர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். அவ்வாறு  செய்தால் அவருக்கு  வழக்கமான  மருத்துவ  சிகிச்சை  கிடைப்பதற்கு வசதியாக  இருக்கும்  என்றவர்கள்  சொன்னார்கள்.

அன்வாருக்கு  முறையான  மருத்துவ  கவனிப்பு  கிடைக்காததால்  அவரது  உடல்நிலை  விரைவாக  மோசமடைந்து  வருகிறது  என  வழக்குரைஞர்கள்  சிவராசையாவும் ஜெரெட்  ஜென்சரும்  பத்திரிகை  அறிக்கையொன்றில்  கூறினர்.

பிப்ரவரி  10-இல்,  சிறையில்  அடைக்கப்பட்டதிலிருந்து  அன்வார்  6கிகிராம்  எடை குறைந்திருப்பதாகவும்  இரத்த  அழுத்தமும்  நிலையாக  இல்லை  என்றும், சிறுநீரக பாதிப்பு, தோள்பட்டையில்  தசை  கிழிந்திருப்பது, நாள்பட்ட  மூட்டு அழற்சி  போன்றவற்றால்  அவர்  துன்பப்படுவதாகவும்  அவர்கள்  கூறினர்.

அவருக்கு  மருத்துவ  சிகிச்சையுடன்  கோதுமைபுரதம்- அற்ற உணவும்  தீவிர உடலியல்  சிகிச்சையும்  தேவைப்படுவதாகவும்  இவை  சுங்கை  பூலா  சிறையில்  கிடைக்காது  என்றும்  அவர்கள்  குறிப்பிட்டனர்.