மீனவர் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை!

tamilnadu_fishermen_001தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மீனவர்களுக்கு இடையிலான நான்காம் கட்ட பேச்சுவார்த்தைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறத்தப்பட்டுள்ளது.

தமிழக மற்றும் பாண்டிச்சேரி மீனவர்கள் சங்கத் தலைவர் என் ஜே போஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக இந்த பிரச்சினை காணப்படுகிறது.

இதில் இன்னும் தீர்வு காணப்படவில்லை.

அத்துடன் தொடர்ந்தும் தமிழக மீனவர்கள் சிறிலங்காவின் கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர்.

இது தொடர்பில் தமிழக மற்றும் சிறிலங்காவின் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

-http://www.pathivu.com

TAGS: