கேஎல்ஐஏ அமிழ்ந்து கொண்டிருக்கிறது, ஏர் ஏசியா எச்சரிக்கை

klia2கோலாலும்பூர் அனைத்துலக  விமான  நிலையத்தின்  ‘பட்ஜெட்’ பயண முனையம் பூமிக்குள்  அமிழ்ந்து  கொண்டிருக்கிறது. விமானங்கள்  மெதுவாக  நகர்ந்து  செல்லும்  நடையோடுபாதையில்  விரிசல்கள்  ஏற்பட்டு  நீர்  தேங்கி  நிற்கிறது.

இக்குறைபாடுகளால்  பயணங்கள்  தாமதமாகலாம், விமானங்களில்  தேய்மானங்கள்  அதிகரிக்கலாம் ஆபத்துகளும்  நிகழலாம்  என  ஏர்  ஏசியா  நிறுவனம்  கூறிற்று. இதுவரை விமானங்களின்  புறப்பாடும் தரைஇறங்கலும்  பாதிக்கப்படவில்லை  ஆனாலும் பயணிகளிகளுக்கு  எதுவும்   ஏற்படுவதற்கு  முன்பு  பிரச்னைகளைக்  களைவது  நல்லது  என ஏர் ஏசியா  தலைமை  செயல்  அதிகாரி  ஐரீன்  ஒமார்   விமான  நிலைய  அதிகாரிகளை  கேட்டுக்கொண்டார்.

“விமான  நிலையம்  அமிழ்ந்து  கொண்டிருக்கிறது”, என்று  ஐரீன்  குறிப்பிட்டார்.  ஏர்போர்ட்ஸ்  ஹொல்டிங்  நிறுவனம், “மேற்பரப்பை  மட்டும் அரைகுறையாக  செப்பனிட்டிருக்கிறது. ஆனால்,  விமான  நிலையத்துக்குத் தேவை  நிரந்தரமான தீர்வு”, என்றாரவர்.