முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடலை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக்கொள்கிறார்

APJ.Abdul kalam 07கவுகாத்தியில் இருந்து டெல்லிக்கு கொண்டுவரப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடலை, பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக்கொள்கிறார்.

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்துல் கலாம் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

மேடையில் பேசிக்கொண்டிருந்த போது மாலை 6.30 மணி அளவில் அவர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை அங்கிருந்து அந்த பகுதியில் உள்ள பெதானி என்ற தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்துல் கலாமை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அப்துல் கலாம் மரணம் அடைந்தார்.

அவரது உடல் ஷில்லாங்கில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அசாம் மாநிலம், கவுகாத்தி கொண்டுவரப்பட்டு, அங்கிருந்த ராணுவ விமானம் மூலம் டெல்லி கொண்டுவரப்படுகிறது. அவரது உடலை விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக்கொள்கிறார்.

-http://www.nakkheeran.in

TAGS: