புதிய அமைச்சரவை அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் பிஎம்ஓ-வில் செய்தியாளர்கள் குவிந்தனர்

pmo oபுத்ரா  ஜெயாவில்  பிரதமர்துறை  அலுவலகத்தில்  செய்தியாளர்களின்  கூட்டமோ  கூட்டம். பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் விரைவில்  புதிய  அமைச்சரவையை  அறிவிக்கப்  போகிறார்  என்ற  எதிர்பார்ப்புதான்  இதற்குக்  காரணம்.

முதலில்  மூன்று  மணிக்கு  பிரதமர்  புதிய  அமைச்சரவையை  அறிவிப்பார்  என்று  சொல்லப்பட்டது. பிறகு  பிற்பகல்  1 மணிக்கு  என்றார்கள்.

மலேசியாகினியும்  செய்தியாளர்கள்  கூட்டத்துக்குச்  செல்ல  விரும்பியது. ஆனால்,  அதற்கு  அனுமதி  மறுக்கப்பட்டது.