ஐ.எஸ் வெறித்தனம்: அடுத்த தலைமுறை கொலையாளிகளை உருவாக்கினார்கள் !

ஐ.எஸ் தீவிரவாதிகள் அடுத்த தலைமுறை சிறுவர் கொலையாளிகளை உருவாக்கி விட்டார்கள் என்று ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பல சிறுவர்களை அவர்கள் பிடித்து , பல பயிற்சிகளைக் கொடுத்து அவர்களை எதற்கும் அஞ்சாத சிறுவர் போராளிகளாக மாற்றியுள்ளார்கள். இதனை ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்க ஒரு முக்கியமான காரணம் ஒன்றும் உள்ளது. அது என்னவென்றால் நேற்றை தின(03) ஐ.எஸ் தீவிரவாதிகள் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்கள். அதில் ஒரு 8 வயது அல்லது 9 வயது மதிக்க தக்க சிறுவன் ஒருவர் ஒருவரை சுட்டுக் கொலை செய்கிறான்.

குறித்த சிறுவன் கைத் துப்பாக்கியை பிடித்திருக்கும் விதம். அவன் சுடும்போது அவன் முக பாவம். எதற்கும் அஞ்சாமல் அவர் சுடும் காட்சி என்பனவற்றை ஆராய்ந்த நிபுனர்கள் சிலர். இந்த தகவலை வெளியிட்டுள்ளார்கள். முகத்தில் ஒரு சிறிய பயம் கூட தெரியவில்லை. தாம் ஒருவரைக் கொலை செய்கிறோம் என்ற அச்சம் சிறிதும் இல்லை. இவ்வாறு பெரும் கொலையாளிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் உருவாக்கியுள்ளார்கள்.

-http://www.athirvu.com