தாய்மொழிப்பள்ளிகளை மூட வேண்டும்என்கிறார் அம்னோ அமைச்சர்; மஇகா சுகாதார அமைச்சர் சுப்ரமணியத்திற்கு சுகமில்லையா, ஏன் மௌனம்?

 

kulaமலேசியாவின் புதிய துணைப் பிரதமராகப் பதவி ஏற்று சில நாள்கள்கூட ஆகாத நிலையில் அஹமட் ஸாகிட் ஹமிடி கிளப்பி இருக்கும் சர்ச்சை அவர் அந்தப் பதவிக்கு இலாயக்கற்றவர் என்பதைக் காட்டுகிறது.

நாட்டிலுள்ள தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளை மூட வேண்டும். அப்போதுதான் நாட்டில் இனங்களுக்கிடையில் ஒற்றுமை தழைத்தோங்கும் என்று ஸாகிட் ஹமிடி கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

புதிய துணைப் பிரதமரின் இக்கூற்று ஒட்டுமொத்த மலேசியர்களின் அறிவாற்றலுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது என்று கூறுகிறார் டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன்.