மலேசியாகினிக்குத் தடை போட என்ஜிஓ கோரிக்கை

blockஅரசாங்க- ஆதரவு  என்ஜிஓ-வான  Pertubuhan Minda dan Sosial Prihatin (பிஎம்எஸ்பி)  இணையச்  செய்தித்தளமான  மலேசியாகினிக்கு   உடனடியாக  தடை  விதிக்க  வேண்டும்  என மலேசியத்  தொடர்பு,  பல்லூடக  ஆணையத்திடம்(எம்சிஎம்சி) வலியுறுத்தியுள்ளது.

அந்த  என்ஜிஓ-வின்  ஆலோசகர்  ராமேஷ்  ராவ், 13வது  பொதுத்  தேர்தலிலிருந்து  அச்செய்தித்  தளம்  “முரணான,  குழப்பம்தரக்கூடிய,  அவதூறு  கூறும்”  செய்திகளையே  வெளியிட்டு  வருவதாகக்  கூறிக்  கொண்டார்.

ராமேஷ்  இன்று  மலேசியாகினிமீது  புகார்  கூறும்  மகஜரை ஒன்றை  சைபர்  ஜெயாவில் எம்சிஎம்சி  தலைமையகத்தில்  ஒப்படைத்த  பின்னர்  செய்தியாளர்களிடம்  பேசினார்.