மிளகாய் குண்டின் நெடி தாங்காமல் குகைக்குள் இருந்து வெளியேறிய தீவிரவாதி: அதிரடி கைது

cave_terrorist_001காஷ்மீரில் குகைக்குள் பதுங்கியிருந்த தீவிரவாதியை மிளகாய் கைஎறி குண்டுகளை பயன்படுத்தி கைது செய்துள்ளனர்.

பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ரபியாபாத் பகுதியில் நுழைந்த 5 தீவிரவாதிகளில் ஒரு தீவிரவாதியை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.

தப்பி ஓடி குகைக்குள் மறைந்த 4 தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மீதமிருந்த ஒரு தீவிரவாதி மட்டும் குகைக்குள் பதுங்கியபடி இருந்தான்.

அவனை குகைக்குள் இருந்து வெளியேற்ற ராணுவ வீரர்கள் மிளகாய் கைஎறி குண்டுகளையும், கண்ணீர் புகை குண்டுகளையும் குகைக்குள் வீசினார்கள்.

அவை வெடித்து சிதறியதில் ஏற்பட்ட தாங்க முடியாத நெடியில், அந்த தீவிரவாதி குகையை விட்டு வெளியில் வந்த போது ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் நடந்த விசாரணையில் லஷ்கர் – இ– தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த அவனது பெயர் சாஜித் அகமது என்ற ஜாவித் அகமது என்றும் அவன் பாகிஸ்தானில் உள்ள முசாபர்நகர் பகுதியைச் சேர்ந்தவன் என்று தெரியவந்துள்ளது.

மேலும், அவன் காஷ்மீரில் மிகப்பெரிய நாசவேலை திட்டத்துடன் ஊடுருவியதாக தெரிவித்ததால் மேலும் கூடுதல் தகவல்களை பெற ஸ்ரீநகர் அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடக்க உள்ளது.

-http://www.newindianews.com

TAGS: