மகாதிரும் அவரது துணைவியாரும் பெர்சே 4க்கு திடீர் வருகை

 

 முன்னாள் பிரதமர் மகாதிரும் அவரது துணைவியாரும் பெர்சே 4 பேரணிக்கு திடீர் வருகை மேற்கொண்டனர். அவர்களது வருகை டாத்தாரான் மெர்தேக்கா மற்றும் கோலாலம்பூர் மாநகர் மண்டபத்திற்கிடையிலான பகுதியில் குழுமியிருந்து மக்களை அதிர்சி அலையில் மூழ்கடித்தது.

சுமார் இரவு மணி 7.30 க்கு அங்கு வந்த அத்தம்பதிகளை பேரணிக்கு வந்திருந்தவர்கள் சூழ்ந்து கொண்டு அவர்களது கைகளைக் குலுக்கி அவர்களுடன் சேர்ந்து படமெடுத்துக் கொண்டனர்.

ஊடகத்தினரும் அந்த இடத்திற்கு ஓடோடி வந்தனர்.

சாம்பல் நிற புஸ்கோட் அணிந்திருந்த மகாதிர் பிகேஆரின் உதவித் தலைவர் தியன் சுவாவும் முன்னாள் பிரதமரின் பாதுகாவலர்களும் புடைசூழ அங்கு வந்து சேர்ந்தார்.

இதில் முரண்சுவையானது என்னவென்றால் 1998 இல் அன்வார் இப்ராகிமைமை பதவியிலிருந்து மகாதிர் அகற்றியதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ரிபோமாஸி ஆர்ப்பாட்டங்களின் போது மகாதிரை மிகக் கடுமையாகச் சாடியவர் தியன் சுவா!

பல நிமிடங்களை அங்கு கழித்த பின்னர் மகாதிரும் சித்தி ஹஸ்மாவும் ஒரு காரில் புறப்பட்டு சென்றனர்.