மகாதிர்: “பங்ஸாட்” நஜிப் போக வேண்டும்

 

mbangsatnமலேசியாவை அம்னோ தொடர்ந்து ஆளாவிட்டால், மலாய்க்காரர்கள் இழிவுபடுத்தப்படுவார்கள் என்று பிரதமர் நஜிப் தெரிவித்திருந்த கருத்துக்கு மகாதிர் இப்போது பதிலடி கொடுத்துள்ளார்.

“அந்த “பங்ஸாட்” போய்விட்டால், நாம் “பங்ஸாட்லா” ஆக மாட்டோமென நான் நினைக்கிறேன்” என்று பாசிர் கூடாங்கில் இன்று கூடியிருந்த மக்களின் ஆரவார பெருமுழக்கத்திற்கிடையில் மகாதிர் கூறினார்.

“இனத்தை “மெம்பங்ஸாட்கான்” செய்ய விரும்புவது அம்னோ அல்ல, ஆனால் இந்த ஆள்தான்’ என்று கூறிய மகாதிர், அம்மாதிரியான கருத்தை எவரும் கூறியிருக்கக்கூடாது என்றார்.

“தவறான கருத்தைக் கொண்டிருப்பது அம்னோ அல்ல. அதற்கு நீர்தான் நஜிப்தான்) பொறுப்பு. நீர் போய் விட்டால், எல்லாமே சரியாகி விடும்”, என்றார் மகாதிர்.