மக்கள் சக்தியின் முன் மத குருவின் மந்திரம் எடுபடாது, மகாதிர்

mbangsatnபிரதமர் நஜிப் ரசாக் “ஆர்எம்” என்ற ஒருவரின் வசியத்திற்கு உட்பட்டிருப்பதாக மகாதிர் கூறிக் கொண்டார். ஆனால், அவர் எவருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.

“நஜிப் ஆர்எம்மின் வசியத்திற்கு ஆளாகியிருப்பது மட்டுமல்ல. ஆர்எம்முக்கு உலகம் முழுவதும் பல மத குருக்கள் இருக்கிறார்கள். அவர்கள் நஜிப் (அதிகாரத்திலிருந்து) விழ மாட்டார் என்று வாக்குறுதி கொடுத்துள்ளனர்”, என்று மகாதிர் கூறினார்.

இன்று இன்னேரத்தில், பாசிர் கூடாங்கில் மகாதிர் பங்கேற்றிருந்த நிகழ்ச்சி ஒன்றில் நஜிப் ஏதாவது ஒரு பல்லிசூனிய மந்திரத்தில் சிக்கியுள்ளாரா என்று கேட்கப்பட்டதற்கு மகாதிர் இதனைக் கூறினார்.

“ஆர்எம்மின்” வசியம் இருக்கிறதோ இல்லையோ, பிரதமரின் பதவி மக்களின் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றல்ல என்று அவர் விளக்கமளித்தார்.

“ஆனால், கடவுள் கிருபையால், மக்கள் தங்களுடைய மக்கள் சக்தியைக் காட்டினால், அவர் (பிரதமராக) இருக்க முடியாது”, என்றார் மகாதிர்.