பெர்சே 4: அந்த நரி மகாதிரை நம்பக்கூடாது

 

bersih4-20இரவு மணி 10.20 அளவில் மினாரா மேபேங் அருகில் டிஎபி மேடையிலிருந்து உரையாற்றிய மூத்த தலைவர் லிம் கிட் சியாங் மலேசியாவில் இன்னொரு நஜிப் தோன்றாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அவர் மலேசியர்களை வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்.

அதே மேடையில் பேசிய டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகு, முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டை நம்பக்கூடாது என்று மக்களை எச்சரித்தார்.

“அவர் நமது நண்பர் அல்ல. அவர் நரி போன்றவர். அவர் நஜிப்பின் வீழ்ச்சியைத்தான் விரும்புகிறார், சீர்திருத்தங்களை அல்ல”, என்று கூறினார்.