ரகசிய தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா: அழியுமா ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு?

isis_america_001உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் ரகசிய தாக்குதலில் இறங்கியுள்ளது.

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆள் இல்லா விமானம் மூலமான ரகசிய தாக்குதலை அமெரிக்கா தொடங்கியதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பும் (சிஐஏ) சிறப்பு அதிரடிப்படையும் இணைந்து ஏற்கெனவே தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த ரகசிய தாக்குதல் திட்டத்தின் மூலம் சிரியாவில் ஐ.எஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் குறிவைக்கப்படுகின்றனர்.

இதற்காக சிஐஏ தனது அமெரிக்கப் படைகளையும் ஆளில்லா விமானங்களையும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரும்பப்பெற்றுள்ளது.

இந்த வீரர்கள் அனைவரும் சிரியாவில் தற்போது குவிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

-http://world.lankasri.com