புகைமூட்டத்தால் பார்க்கும் தூரம் குறைந்து விட்டது

visibityநாட்டின்  பேரும்பகுதியைச்  சூழ்ந்து  கொண்டிருக்கும்  புகை  மூட்டத்தால் ஒன்பது  மாநிலங்களில் கடலில்  பார்க்கும்  தூரம் வெகுவாகக்  குறைந்து  விட்டது  என்றும்  ஐந்து  கிலோ மீட்டர்  தொலைவுக்கு  மட்டுமே பார்க்க  முடிகிறது  என்றும் வானிலை  ஆய்வுத்  துறை  எச்சரித்துள்ளது.

ஜோகூர்,  கெடா,  பினாங்கு,  பேராக்,  சிலாங்கூர்,  நெகிரி  செம்பிலான், மலாக்கா, பகாங், சர்வாக்  ஆகியவை  பாதிக்க்கப்பட்ட  மாநிலங்கள்  என  அது  ஓர்  அறிக்கையில்  கூறியது.

“இந்நிலவரம்  திசைகாட்டும்  கருவிகளைக்  கொண்டிராத  கலங்களுக்கு  ஆபத்தாகும்”, என்று  அது  கூறிற்று.