ஆட்சியாளர்கள் நஜிப் வெளியேற அழுத்தம் கொடுக்க வேண்டும், பாஸ் வலியுறுத்து

mafuzபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பதவியிலிருந்து  வெளியேற  ஆட்சியாளர்கள்  மன்றம் அழுத்தம்  கொடுக்க  வேண்டும்  என  பாஸ்  நாடாளுமன்ற  உறுப்பினர்  மாபுஸ்  ஒமார்  கேட்டுக்  கொண்டிருக்கிறார்.

அதன்பின்  அவர்கள்  நாட்டின்  நிர்வாகத்தைச்  சீரமைக்க  அனைத்துக்  கட்சிகளையும்  உள்ளடக்கிய  இடைக்கால  அரசாங்கம் ஒன்றை  அமைக்க  வேண்டும்.

சட்டத்துறைத்  தலைவர்  முகம்மட்  அப்பாண்டி அலியையும்  பதவியைவிட்டுத்  தூக்க  வேண்டும்  என  மாபுஸ்  வலியுறுத்தினார். பேங்க்  நெகாரா  1எம்டிபிமீது  புலனாய்வு  செய்து  அவரிடம்  அறிக்கை  தாக்கல்  செய்து  ஒரு  மாதமாகியும்  அவர்  இன்னும்  நடவடிக்கை  எடுக்கவில்லை.

“மாஃப்யா  கூட்டத்தில்  நடப்பதுபோல் நாட்டின்  நிர்வாகம்  நடைபெறுவதை  ஆட்சியாளர்கள்  உணர  வேண்டும்”, என்றாரவர்..

மாஃப்யா  கூட்டத்தில் தலைவரை  எதிர்ப்பவர்கள்  சுட்டுக்  கொல்லப்படுவார்கள்.  நம்  நாட்டு  அரசியலில்  நஜிப்பை எதிர்ப்பவர்கள்  “தூக்கி  எறியப்படுவார்கள். மிரட்டலுக்கு  ஆளாவார்கள்”, என  மாபுஸ்  விளக்கமளித்தார்.