பிரதமர்: கற்பனை ஆற்றாலைக் கொண்டு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வருமானம் பெறுவீர்

limitபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  அளவற்ற  வருமானத்தைப்  பெறுவதற்கு இரகசிய வழி  ஒன்றைத்  தெரிவித்திருக்கிறார்.

ஒருவர்  தொழில்முனைவராகி  மாறுபட்ட   முரையில்  சிந்திக்கத்  தொடங்கினால்  அவரது  சாதனைக்கு  எல்லையே  இருக்காது என்றாரவர்.

தனக்குத்தானே முதலாளியாக  இல்லாதவர்கள்  ஒரே  வருமானத்தைத்தான்  தொடர்ந்து  பெற்றுக்  கொண்டிருப்பார்கள்.

“ஆனால்,  நாம்  தொழில்முனைவர்களாகி   இணையத்தைப்  பயன்படுத்தத்  தொடங்கி  விட்டால்  பின்னர்  வெள்ளையர்கள்  கூறுவதுபோல்  ‘வானமே  எல்லை’, வருமானத்துக்கு  எல்லையே  இருக்காது”.

பிரதமர்  இன்று  கோலாலும்பூர்  புத்ரா  உலக  வாணிக  மையத்தில்  e-usahawan திட்டத்தைத் தொடக்கிவைத்து  உரையாற்றினார்.