அம்னோவின் தலைவர் நஜிப் ரசாக் தாம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாக அறிவித்ததைத் தொடர்ந்து தாம் பலிகடாவாக்கப்பட்டுள்ளதாக கோபெங் அம்னோ வனிதா முன்னாள் தலைவர் ஹமிடா ஓஸ்மான் வருத்தப்பட்டுக் கொண்டார்.
அம்னோவின் மூத்த தலைவர் டாக்டர் மகாதிர் இன்னும் கடுமையாக நஜிப்பை குறை கூறியுள்ளார். ஆனால் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை என்பதை ஹமிடா சுட்டிக் காட்டினார்.
தம்மைவிட இன்னும் கடுமையாகக் குறை கூறியவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஏன் தம் மீது மட்டும் நடவடிக்கை என்று அவர் வினவினார்.
“ஏனென்றால் நான் ஒரு பெண், பலவீனமானவர் என்று கருதப்பட்டவர், ஆகவே எனக்கு எதிராக நடவடிக்கை”, என்று ஹமிடா இன்று ஈப்போவில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்திற்குப் பின்னர் மலேசியாகினியிடம் கூறினார்.
அம்னோ உச்சமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவித்ததைத் தொடர்ந்து அதற்கு எதிர்வினையாற்ற ஹமிடா இச்செய்தியாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
1எம்டிபி விவகாரம் மற்றும் ரிம2.6 மில்லியன் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டது போன்றவை குறித்து ஹமிடா பிரதமர் நஜிப்பை கடுமையாகக் குறை கூறியிருந்தார்.
அள்ளிக் கொடுப்பான் என்று துள்ளிக் குதித்த அம்மையருக்கு கஞ்சித் தண்ணி. அரசாண்டவனுக்கு கொஞ்சம் நாள் தள்ளி வரும் மஞ்சத் தண்ணி தெளிக்க.
கேள்வி கேட்டால், தலைவனின் அரிவாள் கழுத்துக்கு வந்துவிடும். அம்னோ எவ்வளவோ பரவாயில்லை. டி.எ. பி.யில் பினாங்கின் இடி அமின் [லிம் குவான் எங்] கேள்வி கேட்கும் கட்சி உறுப்பினர்களை வதை செய்யும் விஷயம், படு மோசம்.
உங்கள் கேள்வி நியாயமானதுதான் !
நீங்கள் மாமா மகாதீரைபோல் “கடுமையாக” நஜிப்பை குறை கூறவில்லை என்று நீக்கியிருக்கலாம் ! இப்பொழுது இந்த நல்லதொரு வாய்ப்பை பயன்படுத்தி நஜிப்பை “மிக கடுமையாக” குறை கூற ஏதும் தடையில்லையே !
நஜிப் -மகாதிர் கூட்டுக் களவாணிகள் . பாவம் ஹமிடா மட்டுமல்ல கிட்,அன்வார் ,கூட பாவம் தான் . மன்கூலிய கொலைச சம்பவத்தின் போது யாரைய்யா பிரதமர்