நூருலை அடுத்து தியான் சுவாவிடம் போலீஸ் விசாரணை

tianலெம்பா  பந்தாய்  எம்பி  நூருல்   இஸ்ஸா- சூலு இளவரசி  ஜெசல்  இப்ராகிம்  சந்திப்பு தொடர்பில்  போலீசார்  பிகேஆரின்  பத்து  எம்பி  தியான்  சுவாவை  அடுத்து  விசாரணைக்கு  அழைப்பார்கள்  எனப்  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்   கூறினார்.

நேற்று  இதே  விவகாரம்  தொடர்பில்  நூருலிடம்  விசாரணை  நடத்தப்பட்டது.

கீழறுப்புச்  செயலில்  ஈடுபடும்  முயற்சிகளுக்கு  எதிராக  பயன்படுத்தப்படும் குற்றவியல்  சட்டம் பகுதி  124எல்- இன்கீழ்  அவரிடம்  விசாரணை  நடத்தப்பட்டதாக  காலிட்  தெரிவித்தார். ஆனால், இதே  சட்டத்தின்கீழ்தான்  தியான்  சுவாவும்  விசாரிக்கப்படுவாரா  என்பதை  அவர்  தெரிவிக்கவில்லை.