அஸலினா: மற்ற நாடுகளில் அரசாங்க இரகசியங்கள் அம்பலமாவதில்லை

azalஅதிகாரப்பூர்வ  இரகசியச்  சட்டத்தில் (ஓஎஸ்ஏ)  திருத்தங்கள்  கொண்டுவரும்  சட்டத்துறைத்  தலைவர்  முகம்மட்  அபாண்டி  அலியின்  முடிவு   இப்போதைக்கு  அவசியமான  ஒன்று  எனப்  பிரதமர்துறை  அமைச்சர்  அஸலினா  ஒத்மான்  நினைக்கிறார்.

நாட்டில்  அரசாங்கத்தின்  இரகசியங்கள்  அம்பலமாகி  இருப்பதை  அவர்  சுட்டிக்காட்டினார்.

“மற்ற  நாடுகளில்  இந்த  நிலை  இல்லை.  மலேசியாவில் நிறைய  இரகசியங்கள்  கசிகின்றன.

“சட்டத்துறைத்  தலைவர்  சரியான  நேரத்தில்தான்  அப்படிக்  கூறியுள்ளார். அரசாங்க  அதிகாரிகளும்  மூன்றாம்  தரப்பினரும்   நிறைய  இரகசியங்களைக்  கசிய  விட்டுக்  கொண்டிருந்தால்  எப்படி  ஆட்சி  நடத்துவது?”,  என்றவர்  வினவினார்.