அமானா: அம்னோ கைக்குப் போய்விடக்கூடாதே என்பதால்தான் பாஸின் இடங்களில் போட்டி இடுகிறோம்

contestபார்டி  அமானா  நெகாரா, பாஸ்  களமிறங்கும்  இடங்களில்  எல்லாம்  போட்டியிட  முடிவு  செய்துள்ளது  என்றால்  அந்த  இடங்கள்  அம்னோவின்  கைக்குப்  போய்விடக்  கூடாதே  என்ற  அக்கறைதான்  காரணமே  தவிர,  அதற்கு  பிகேஆரும்  டிஏபி-யும்  வேறு  இடங்களைக்  கொடுக்காதது  காரணமல்ல.

இதனைத்  தெரிவித்த  சிலாங்கூர்  அமானா  இளைஞர்  தலைவர்  அப்பாஸ்   அஸ்மி,  பிகேஆரும்  டிஏபியும்  அவற்றின்  இடங்களைக்  கொடுக்க  மறுத்து  விட்டதால்தான்  அமானா,   பாஸின்  இடங்களில்  போட்டியிட   முடிவு  செய்துள்ளது  என   சிலாங்கூர்  பாஸ்  ஆணையர்  இஸ்கண்டர்  அப்துல்  சமட்  கூறியிருப்பதை  மறுத்தார்.

“பிகேஆரும்  டிஏபியும்  நிராகரித்து  விட்டதால்தான்  அமானா  பாஸ்  போட்டியிடும்  இடங்களில்  போட்டியிடுகிறது  என்று  சிலாங்கூர்  பாஸ்  ஆணையர்  கூறியிருப்பதற்கு  ஆதாரமில்லை”. என  அப்பாஸ்  குறிப்பிட்டார்.

“அந்த  இடங்கள்  அடுத்த  பொதுத்  தேர்தலில்  அம்னோ/பிஎன்  கைக்குப்  போய்விடலாம்  என்று  அஞ்சுகிறோம்.  அதனால்தான்  பாஸின்  இடங்களை  அமானா  கைப்பற்ற  நினைக்கிறது”, என்றார்.