பிஏசி தலைவர்: மேலும் சாட்சிகளை விசாரித்துக் கொண்டு போனால் 1எம்டிபி அறிக்கை தாமதப்படும்

arifபொதுக்  கணக்குக்குழு,  1எம்டிபி விசாரணைக்காக  மேலும்  சாட்சிகளை  அழைக்கப்போவதில்லை. அதனிடம்  போதுமான  தகவல்கள்  உள்ளன  என்பதால்  மேலும்  சாட்சிகளை  விசாரிப்பது  “தேவையற்றது”. அது  அறிக்கை  தயாரிக்கப்படுவதைத்  “தாமதப்படுத்தி  விடும்”.

“நான்  ஏற்கனவே  அறிவித்ததுபோல்   1எம்டிபி  நிர்வாகம்  பற்றி  பிப்ரவரி  11-இலும்  12-இலும்  சாட்சியம்  அளிக்கப்போகும்  (முன்னாள்  தலைவர்(  பக்கே  சாலே-யும்  (முன்னாள் தலைமை  செயல் அதிகாரி)  ஷாரோல்  அஸ்ராலும்தான்  கடைசி  சாட்சிகளாவர்”, என  பிஏசி  தலைவர்  ஹசன்  அரிபின்  இன்று  ஓர்   அறிக்கையில்  தெரிவித்தார்.

2015  மே  தொடங்கி   நடைபெற்றுவரும் விசாரணைகளில்  போதுமான  தகவல்கள்  திரட்டப்பட்டிருப்பதாகவும்  அவற்றைக்  கொண்டு  தெளிவான,  நியாயமான  முடிவுக்கு  வர  முடியும்  என்றும்  அவர்  குறிப்பிட்டார்.