தமிழ்நாட்டில் சாதியின் பெயரால் மீண்டும் ஒரு ஆணவக்கொலை….!

sathi-1தமிழ் நாட்டில் சாதியின் பெயரால் தொடரும் ஆணவப் படுகொலைகளுக்கு பலியாகும் அப்பாவி காதலர்களின் வரிசையில் மீண்டும் ஒரு காதலர்கள்.

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி ஓலக்குடி பகுதி குரு மூர்த்தி என்ற தலித்தாக பார்க்கப்பட்ட இளைஞனையும் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என கூறப்படும் சரண்யா என்ற யுவதியையும் காதலர்கள் என அறிந்து சாதி வெறியர்களால் அடித்து கொல்லப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

சாதி என்ற சாக்காட்டு மரபுகளால் எங்கள் தமிழினம் மாண்டு ஒழியும் அநீதிக்கு எதிராக அனைத்து தமிழ் மக்களும் வலிமையாக அணி திரள்வோம்.

சாதியை சுமப்பவன் தமிழனாக இருக்க முடியாது. சுட்டெரிப்போம் சாதி என்ற குப்பையை! ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த அனைவரும் எழுக!

செய்தி தொகுப்பு
செந்தமிழினி பிரபாகரன்

sathi

TAGS: