கமலஹாசன் நடித்து வெளிவரும் ‘சபாஷ் நாயுடு’ என்ற படத் தலைப்பை வன்மையாக கண்டிக்கின்றோம் !

kamalhassan_001கமலஹாசன் நடித்து வெளிவரும் ‘சபாஷ் நாயுடு’ என்ற படத் தலைப்பை வன்மையாக கண்டிக்கின்றோம் !

தமிழகத்தில் எல்லா துறைகளிலும் தெலுங்கர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் . குறிப்பாக தமிழக அரசியலில் தெலுங்கர்களின் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தில் தெலுங்கின ஆதிக்கத்திற்கு எதிராக பலமா குரல் முன்னெப்போதும் இல்லாதவாறு இப்போது எழுந்துள்ளது.

கடந்த 700 ஆண்டுகளாக தெலுங்கர்கள் தான் அரசியல், பொருளாதாரம், கருத்தியல் ரீதியாக தமிழர்களை ஆளுமை செலுத்துகிறார்கள். திருமலை நாயக்கர் காலம் தொடங்கி ஈ.வெ.ரா காலம் தொடர்ச்சியாக தற்கால விஜயகாந்த், வைகோ, கருணாநிதி காலம் வரை தெலுங்கர்கள் தான் தமிழகத்தில் ஆளுமை சக்தியாக வலம் வருகிறார்கள். இந்த நிலையை மாற்றி தமிழ்நாட்டை தமிழர்களே ஆட்சி செய்ய வேண்டும் என்ற குரல் மேலோங்கி வருகிறது .

இப்படியான நேரத்தில் கமலஹாசன் தனது படத் தலைப்பை ‘சபாஷ் நாயுடு’ என்று வைத்திருப்பது தமிழர்களை வேண்டுமென்றே தாழ்வு செய்யும்படி உள்ளது . சென்ற ஆண்டு தான் சந்திரபாபு நாயுடு 20 தமிழர்களை ஆந்திராவில் வைத்து சுட்டுக் கொன்றார் . அதை பல தமிழ் அமைப்புகளும் கண்டித்தும் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை . காரணம் தமிழகத்தை தமிழர் அல்லாதவர்களே ஆட்சி செய்து வருவது தான் என்பது தமிழர்களின் கருத்தாக உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் நடித்து தமிழ்நாட்டில் பணமும் புகழும் ஈட்டி வரும் கமலஹாசன் தெலுங்கு நாயுடுகளுக்கு ஆதரவான படத்தலைப்பை வைத்திருப்பது வேண்டுமென்றே தமிழர்களை புண்படுத்தும் செயலாகும். தெலுங்கு திராவிட ஆதிக்க சக்திகளுக்கு எதிராக எழுந்து வரும் தமிழின குரலுக்கு எதிராக தெலுங்கர்களே கமலஹாசன் அவர்களை வழிநடத்துவதாக நாம் சந்தேகிக்க வேண்டியும் உள்ளது. இப்படியான படத் தலைப்புடன் ஒரு திரைப்படம் தமிழகத்தில் வெளிவந்தால் அது தமிழகத்தில் தேவையற்ற இனப்பிரச்சனையை நிச்சயம் ஏற்படுத்தும்.

அதனால் ‘சபாஷ் நாயுடு’ என்ற இப்படத் தலைப்பிற்கு தமிழர்கள் சார்பில் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். உடனடியாக தமிழர்களை இழிவு படுத்தும் இப்படியான சாதிவெறித் தலைப்பை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறோம்.

– தமிழர் பண்பாட்டு நடுவம்