நூருல் இஸ்ஸாவுக்கு சரவாக்கில் தடை; எழுதிக் கேட்டும் பயனில்லை

nuruபிகேஆர்  உதவித்  தலைவர்  நூருல்  இஸ்ஸா  அன்வாருக்கு  சரவாக்    நுழைய  விதிக்கப்பட்ட  தடை  அகற்றப்படவில்லை.  சரவாக்கில்  நுழைய  முதலமைச்சர்  அடினான்  சாதேமுக்குக்  கடிதம்  எழுதி  அனுமதி  கேட்டதுகூட  பயனளிக்கவில்லை.

லெம்பா  பந்தாய்  எம்பியான  நூருல்  இன்று  காலை  மீரி  விமான  நிலையம்   சென்றபோது அங்கு  அவர்  தடுத்து  நிறுத்தப்பட்டதை    பிகேஆர்   தொடர்பு  இயக்குனர்  பாஹ்மி  பாட்சில்   உறுதிப்படுத்தினார்.

அதன்  தொடர்பி  டிவிட்  செய்திருந்த  நூருல்,  கடந்த  வெள்ளிக்கிழமையே  முதலமைச்சருக்குக்  கடிதம்  எழுதியிருந்தும்கூட  தாம்  திருப்பி  அனுப்பப்பட்டது  அதிர்ச்சி  அளிக்கிறது  என்று  குறிப்பிட்டிருந்தார்.

நூருல் இஸ்ஸா  கடந்த  டிசம்பரில்  சரவாக்  செல்ல  முற்பட்டபோது  முதலாகத்   தடுக்கப்பட்டார்.