புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகளின் கைதுகளுக்கு காரணம் என்ன? த.தே.கூட்டமைப்பு

tna_colombo_1புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் மீண்டும் கைது செய்யப்படுகின்றமைதொடர்பில் காரணங்கள் வெளிப்படுத்தப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகோரியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்தக் கோரிக்கையை இன்றுநாடாளுமன்றத்தில் விடுத்தார்.

தொடரும் கைதுகள் வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மைக்காலத்தில் நான்கு முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் வடக்கு கிழக்கில்கைது செய்யப்பட்டனர்.

இதில் விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வு உறுப்பினர்களும் அடங்குகின்றனர்.

இதேவேளை வடக்கு தகவல்களின் படி கடந்த மார்ச் 29ம் திகதியில் இருந்து இதுவரை 23முன்னாள் விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: