பேங்க் நெகாராவிடம் அபராதம் செலுத்திய 1எம்டிபி அபராதத் தொகை எவ்வளவு என்பதைக் கூற மறுத்தது

bhdஇன்று  1எம்டிபி,  விதிமுறைகளைப்  பின்பற்றாததற்காக  பேங்க்  நெகாரா   விதித்த  அபராதத்தை  மத்திய  வங்கியில்  செலுத்தியது.

“1எம்டிபி  பேங்க்  நெகாராவின்  முடிவுக்கிணங்க  அதற்கு  விதிக்கப்பட்ட  அபராதம்  முழுவதையும்  இன்று  செலுத்தியது  என்பதை  இதன்வழி  உறுதிப்படுத்துகிறோம்”, என  அந்நிறுவனம்  இன்று  ஓர்  அறிக்கையில்  கூறியது.

ஆனால்,  அபராதத்  தொகை  எவ்வளவு  என்பதை  அது  தெரிவிக்கவில்லை.

மத்திய  வங்கியும்  அத்தொகையை  வெளியில்  சொல்வது  அதன்  விதிமுறைகளை  முரணானது  என்று  ஏற்கனவே  தெரிவித்திருந்தது.

2009, 2010, 2011  ஆகிய  ஆண்டுகளில்  1எம்டிபி வெளிநாடுகளுக்குப்  பணம்  அனுப்ப  பேங்க்  நெகாரா  அனுமதி  வழங்கியிருந்தது. பின்னர்  அந்த  அனுமதி  இரத்துச்  செய்யப்பட்டது. அனுமதி  இரத்துச்  செய்யப்பட்டதால்  1எம்டிபி  வெளிநாட்டில்  உள்ள  பணத்தை  மலேசியாவுக்குத்  திரும்பக்  கொண்டு வரவேண்டும்  என்று  பணிக்கப்பட்டது.  ஆனால், 1எம்டிபி  அதன்படி  நடக்கவில்லை  என்பதால்  அதற்கு  அபராதம்  விதிக்கப்பட்டது.