சிலாங்கூர் அரசு திடமாகவே உள்ளது: எம்பி திட்டவட்டம்

mbசிலாங்கூர்  அரசிலிருந்து  பாஸ்  வெளியேறினால்  அது  கவிழ்ந்து  விடும்  என்று  கூறப்படும்  வேளையில்  அப்படி  எதுவும்  நடக்காது  என்று  அடித்துக்  கூறுகிறார்  மந்திரி  புசார்  முகம்மட்  அஸ்மின்  அலி.

சிலாங்கூர்  பாஸ் தலைவர்  இஸ்கண்டர்  அப்துல்  சமட்,  சிலாங்கூர்  அரசுக்கு  அந்த  இஸ்லாமியக்  கட்சியின்  ஆதரவு  தொடரும்  என  எழுத்துப்பூர்வமாகவே  உறுதியளித்துள்ளார்  என  அஸ்மின்   கூறியதாக  ஓரியெண்டல்  டெய்லி  தெரிவித்துள்ளது.

“அமனா  கடந்த  ஆண்டில்  அமைக்கப்பட்டதை   அடுத்து   நான்  இஸ்கண்டரைச்  சந்தித்தேன்”, என்றவர்  அந்நாளேட்டில்  இன்று  வெளிவந்த  ஒரு  நேர்காணலில்  கூறினார்.

“சிலாங்கூர் பாஸ்  பக்கத்தான்  ரக்யாட்டின்  பொதுக்  கொள்கைக்  கட்டமைப்புக்கும்  பக்கத்தான்  ரக்யாட்  பட்ஜெட்  பரிந்துரைகள்,  புக்கு  ஜிங்கா (தேர்தல்  அறிக்கை)  ஆகியவற்றுக்கும்  தொடர்ந்து  ஆதரவு  அளிக்கும்  என  எழுத்து  வடிவில்  அவர்  உறுதி  அளித்தார்”, என்றாரவர்.

இஸ்கண்ட்ரின்  உத்தரவாதம்   தமக்கு  நம்பிக்கை  தந்திருப்பதாக  அஸ்மின்  கூறினார்.