கிறிஸ்தவ தேவாலயத்தை குறிவைத்து தாக்குதல்: ஆறு பேர் பலி

kabul-bomb_1241022cலெபனான்- சிரியா எல்லைப்பகுதியில் உள்ள கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயத்தை குறிவைத்து நடத்தப்பட்ட நான்கு மனித வெடிகுண்டு தாக்குதல்களில்6 பேர் பலியாகியுள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளனர்.

லெபனான்- சிரியா எல்லைப்பகுதியில் உள்ள கிராமம் குவா, இந்த கிராமத்திற்குள் நுழைந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

முதல் தாக்குதல் நடந்து பத்து நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து மூன்று தாக்குதல்கள் நடந்ததாகவும் தெரியவருகிறது.

இதில் ஒன்று தேவாலயத்தில் இறுதிச் சடங்கு நடந்த போது நடைபெற்றதாகவும், 19 பேர் காயமடைந்ததாகவும் தெரியவருகிறது.

இந்த தாக்குதலுக்கு இதுவரையிலும் எந்தவித தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

-http://news.lankasri.com