காரில் சென்று கொண்டிருந்த நிறுவன மேலாளர் சுடப்பட்டார்

shootசிரம்பானிலிருந்து   கோலாலும்பூரில்  உள்ள  தம்   அலுவலகத்துக்குக்  காரில்  சென்று  கொண்டிருந்த  ஒரு  நிறுவனத்தின்   பொது  மேலாளர்  இன்று  சுடப்பட்டார்.

மோட்டார்  சைக்கிளில்  வந்த  இரு  ஆடவர்கள்  ஆறு  தடவை  அவரை  நோக்கிச்  சுட்டனர்  என   கோலாலும்பூர்  போலீஸ்  தலைவர்  அமர்  சிங்   கூறினார்.   வடக்கு- தெற்கு  நெடுஞ்சாலையில்  தேசா  பெட்டாலிங்   அருகில்  காலை  மணி  8.40க்கு   அச்சம்பவம்  நடந்திருக்கிறது.

ஆறு  தோட்டாகளில்  இரண்டு  அவரது  வலப்புற  தோளிலும்  இரண்டு  வலப்  பக்கக்  கழுத்திலும்   ஒன்று  நெஞ்சிலும்  பாய்ந்ததாக  அமர்  சிங்   தெரிவித்தார்.  சிகிச்சைக்காக  அவர்  யுனிவர்சிடி  கெபாங்சான்   பல்கலைக்கழக  மருத்துவமனைக்கு  அனுப்பப்பட்டார்.

சுடப்பட்டவர்  தமக்கு  கொலை  மிரட்டல்  வந்திருப்பதாக  ஏற்கனவே  புகார்  செய்திருப்பதாகவும்  அவர்  கூறினார்.