‘பிரதமருக்கு எதிரான சதி” மீதான புகார் பற்றி அம்னோ இளைஞர் தலைவரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர்

 

umnoyouthprobedஉயர்மட்ட அளவில் பிரதமர் நஜிப்பிக்கு எதிராக சதி செய்யப்படுவதாக அம்னோ இளைஞர் உதவித் தலைவர் கைருல் அஸ்வான் ஹருன் செய்திருந்த போலீஸ் புகார் பற்றி போலீசார் அவரின் வாக்குமூலத்தை இன்று பதிவு செய்தனர்.

கைருலின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதை ஐஜிபி காலிட் அபு பாகார் உறுதிப்படுத்தினார்.

“ஆம். நாங்கள் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளோம். ஆனால், இப்போதைக்கு அது பற்றிய கூடுதல் விபரங்களை வெளியிட முடியாது”, என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

அவரது குற்றச்சாட்டுகளை நிருபிப்பதற்கு கைருல் ஏதேனும் சாட்சியங்களை முன்வைத்தாரா என்ற கேள்விக்கு, “நான் அதிகமானதை எனது அடுத்த செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடுவேன்”, என்று ஐஜிபி பதில் அளித்தார்.