பினாங்கில் திடீர் தேர்தல் இல்லை

pollsபினாங்கில்    திடீர்   தேர்தல்   நடத்தும்    திட்டத்தை   டிஏபி  கைவிட்டிருப்பதாக    முதல்   அமைச்சர்   லிம்  குவான்   எங்  அறிவித்தார்.

“அத்திட்டத்துக்கு   பிகேஆர்  ஒத்துக்கொள்ளவில்லை,   அதுதான்  காரணம்”,  என்று  லிம்   இன்று   செய்தியாளர்   கூட்டமொன்றில்   கூறினார்.

அத்திட்டத்துக்கு  பிகேஆரில்   ஆதரவு  இல்லை      என்பதை   அதன்   துணைத்  தலைவரும்   சிலாங்கூர்   மந்திரி   புசாருமான   அஸ்மின்   அலி    நேற்று  தமக்குத்   தெரியப்படுத்தியதாகவும்    அதனை    அடுத்து    கட்சித்  தலைவர்களுடனும்    பினாங்கு   மாநிலத்   தலைமைத்துவத்துடனும்  கலந்தாலோசித்து   திடீர்  தேர்தலைக்  கைவிடுவதென்று  முடிவு   செய்ததாக  லிம்   சொன்னார்.