அரசாங்கத் தொடர்புடைய வங்கி இயக்குனர் ஊழல் விவகாரத்தில் தடுத்து வைக்கப்பட்டார்

arrestஅதிகார  அத்துமீறல்,   ஊழல்  விவகாரங்களுக்காக     அரசாங்கத்  தொடர்புடைய   ஒரு   வங்கியின்  நிர்வாக  இயக்குனரையும்   மேலும்  மூவரையும்    மலேசிய  ஊழல்தடுப்பு    ஆணையம்  கைது  செய்தது.    விசாரணைக்காக   அவர்கள்   மூன்று  நாள்களுக்கு    தடுத்து    வைக்கப்பட்டனர்.

40-வயதான  வங்கி  இயக்குனரிடமிருந்து  ரிம20,000- ரிம30,000  மதிப்புள்ள  ஆறு  கடிகாரங்களை  மலேசிய  ஊழல்தடுப்பு    ஆணையம்  கைப்பற்றியது. அந்த  இயக்குனர்   ஒரு  ‘டத்தோ’வும்  ஆவார்.

அந்நால்வரையும்  விசாரணைக்காக   மூன்று  நாள்களுக்குத்  தடுத்து  வைக்க  மெஜிஸ்திரேட்   நிக்  இஷாபானி    தஸ்னிம்   வான்  அப்துல்  ரஹ்மான்    உத்தரவிட்டார்.

கைது  செய்யப்பட்டவர்களில்  ஒருவர்   வங்கியின்   முன்னாள்  ஊழியர்.  மற்றுமிருவர்   ஒரு  பதிப்பகத்தைச்   சேர்ந்தவர்கள்.