ராஜபக்சேவால் – தமிழர்களுக்கு எதிராக ஆசிய அரசியல் மயம் மலேசியாவில் மந்தியானது.

raajapakseஆசிய அரசியல் கட்சிகளின் அனைத்துலக மாநாடு(ஐசிஏபிபி), அணிசேரா நாடுகள் இயக்கம், இதில் ம இ கா அணி சேர்ந்து விட்டதால் க்கா க்கா இலையாம் ? BN னுடன் அணி சேர்ந்து விட்டதால் வேலை இல்லை போலும் ! பெர்னாமா அன்பு மணிதான் இடித்தும் எடுத்தும் சொல்ல வேண்டும்.

மாநாட்டில் ராஜபக்சே பேசும் படம் புலனத்தில் பார்த்தோம்.புலிகளுக்கு எதிரானவர் எலிபோல வந்து நமக்கு மலேசியாவில் ஓட்டை போட்டு விட்டார். அங்கே பதாதையில் அம்னோ சின்னமும், மலேசியா கொடியும் இருந்தது.

மலேசியாவில் இதர அரசியல் கட்சிகளை காணோம் என்றே எண்ணுகிறேன். அப்படி செய்திகளும் இல்லை ? வெளியே பாக்காட்டான் கட்சிகள் இன்னும் பல என் ஜி ஒக்கல் என்னையும் சேர்த்து ராஜ்பக்சே வந்துட்டாருனு ரோடெல்லாம் காட்டுக்கத்து கத்தினோம்.

புதுசா மீண்டு வந்த பிரதமர் துறை துணை அமைச்சர் தேவமணி அவர்கள்”:ராஜபக்சே வருகை ரத்து பிரதமர் அறிவித்தார்” என்ற வானொலி செய்தி 2/9/2016 காலை 9 மணிக்கு மின்னல் FM ல சொன்னாங்க. ஆனால் 11 மணிக்கு உலக தமிழின கொலைக்காரன் ராஜபக்சே உலக வாணிப மையத்து கொள்ளையில் கொலை உரை ஆற்றினானாம் . ஒரு கொலைக்காரனிடமிருந்து கொள்கை உரையா கிடைக்கும்?

மகாத்மா காந்தி தனது சத்திய சோதனையில் ஒரு குற்றப்பதிவை போட்டுள்ளார். கொலையும் குற்றமும் செய்து விட்டு வெளியில் திரிபவன்தான் பயங்கர குற்றவாளி என்று.அவனை ஆரத்தழுவி அரங்கம் ஏற்றும் தலைவர்கள் என்ன பட்டியல் என்று பதம் காணுங்கள்.

காட்டிக்கொடுத்த கருணாவுக்கு கூட சமீபத்தில் மரண தண்டனை என்று கேள்வி பட்டோம். அது உள் நாட்டு தீர்ப்பு. ஆனால் இந்த பக்கா கொலைராஜாவுக்கு ஐநா அனைத்துலக தீர்ப்பு கூறமுடியவில்லை. நீதிமான்கள் ஏழு ஆண்டுகள் ஆகியும் கோப்பில் ராஜபக்சே நேரில் கொலை செய்த சாட்சிகள் இல்லையாம். கிடைத்தால் மண்டேலாவை மிஞ்சுவார். ஒரு வேளை அமெரிக்க வல்லரசு தேர்தலுக்கு பிறகாக இருக்கும்.

நம்மிடம்தான் நிழல் கபாலிகள் அதிகமாச்சே நிஜ கபாலிகள் நம்மைத்தானே நசுக்குவான். இதுக்கும் சில வீணர்கள் பதில் எழுதுவார்கள். விவாத பட்டியல் திறமைகளை காட்ட தமிழில் தெறிக்கும் பாருங்களேன் !

ராஜ்பக்சேயவை எதிர்க்க ஒரு மலேசியா இந்தியன் அல்லது தமிழன் அரசியல் தலைவரையும் காணோம். காரணமே இல்லாமல் கணபதி ராவ் வந்து ஒரு OKU தமிழ் நண்பருடன் படம் பிடித்துக்கொண்டார் அதையும் நண்பன் போட்டது. ஏழு தமிழ் பத்திரிக்கைகைகள் ஒரு சினிமா படச்சுருள் போட்டியா படங்களை ஏற்றி என்னமோ எதிர்ப்புக்கு ஏட்டை கிழித்த கதையாய் கண்ணாம்பூச்சி காட்டினார்கள்.

சமுதாயத்துக்கு ஒன்றுமே விளங்கவில்லை. பத்திரிக்கைகள் முன் ஆய்வுகள் இல்லா ஆனந்த பகிர்வுகள். தமிழீழ தமிழன்தானே நம்ம அரசியல் பதவிகளுக்கு ஆப்பு வேண்டாம் என்ற பச்சோந்திகள் பரிகாசம் ஒரு புறம். தமிழ் நாட்டில் தமிழீழத்தையும் தமிழையும் அரசியல் காசாக்கும் அதே புண்ணாக்குகள்.

இங்கே என்ன விடியுதாம். பிரதமர் அவர்கள் தமது 63 வயதில் உலக மனிதம் மகா அரசியல் கலாசார தத்துவங்களை பேசுபவர். சுமார் இரண்டு லட்சம் தமிழீழ தமிழர்களை கொன்ற ராஜபக்சே என்ற சிங்களவன் என்ற கொடூர குற்றவாளியை, அதுவும் தோற்றுப்போன இலங்கை அரசியல் எதிர்க்கட்சியாளன் ஒருவனை …. ஐநா குற்றவியல் பட்டியலில் இருப்பவனை… மனிதக்குண்டு ஜெனோசைட் ஆசாமியை வைத்துக்கொண்டு ஆசியான் அரசியல் மாநாடு நடத்தி ஒரு நவீன இடுகாடு புரட்சியை மலேசியாவில் புரட்டிப் போட்டுள்ளார் நமது பிரதமர். நமது உளவுத்துறை எந்த ஆய்வையும் பிரதமருக்கு தராது போலும்.

மலேசியத்தமிழர்களின் அரசியல் உணர்வுகள் செத்த சொத்தோங் என்ற நினைப்பா இருக்குமோ ? அல்லது இவர்கள் சக்திதான் என்ன பார்ப்போமா என்ற இறுமாப்பா …?ஆமாம்,,,, 20 லட்சம் தமிழர்களில் 200 பேர் ரோட்டுக்கு வந்தோம். புலனத்தில் கொக்கரித்த கோழி குஞ்சிகள் இன்னும் அரசியல் சிறகு முலைக்கா சிக்கன் 64 தான் என்ன செய்வது.

அப்பா காலம் வேறு என் காலம் வேறு என் மகன் காலம் வேறு என்று இன மோசடி ஒன்று இந்த நாட்டில் நடக்குது. தமிழ்இ இனத்துக்கு இடையூருகள் அடுக்கடுக்காக உள்ளது. இனமே இனத்தை தின்றுவிடும் அளவுக்கு செயற்கை போட்டா போட்டியில் திணறிக்கிடக்கிறோம். இன்று கூடும் ஒற்றுமை நாளையே காணாமல் போகிறது. இதற்கு நாம் காரணமல்ல நமது அரசியல்தான். நமது இனத்தை காக்க நல்ல உளவாளிகள் இல்லை இதை மேய்க்க வழி காட்டி தலைவனும் இல்லை. ஒரு வளரும் நாட்டில் சிரமம் வரும் போது மட்டும் கூடி சத்தம் போடும் கூட்டம் உருப்படாது. யாரு அந்த ஜேம்ஸ் பாண்ட்? சி ஐ டி சங்கர் ஜெய சங்கருக்கு பிறகுதான் ஹாலி ஹூட் படங்களில் சீன் கானரி, ரோஜர் மூர்,பியர்ஸ் பிரான்ஸனான் போன்ற ஹீரோக்கள். புரியுதா ?

என் பார்வையில் கபாலி ஹீரோ அல்ல. அவருக்கு மகளாக வந்த அந்த பெண்தான். அதுதான் வரலாறு. இல்லையேல் வெறும் குரங்குகளின் கிராபிக் காட்சிகள்தான்.அலசிப்பாருங்கள் அராஜகம் புரியும்.

தமிழர்களாக எழுவோம் !