1எம்டிபி மீது நூல்: ரியுகாசல் எழுதுகிறார்

rew 1எம்டிபி  ஊழல்களை   விவரிக்கும்   ஒரு  நூலை  எழுதிக்  கொண்டிருக்கும்    சரவாக்  ரிபோர்ட்     ஆசிரியர்  கிளேய்ர்   ரியுகாசல்-  பிரவுன்,       தம்  புலனாய்வு   இதழியல்   வாழ்க்கையில்   அதுவே  மிகப்  பெரிய   சாதனையாக   அமையும்   என்று   நம்புகிறார்.

“இப்போதைக்கு   நான்  சரவாக்  ரிப்போர்டில்   எழுதுவது    கொஞ்சமாக   இருக்கலாம்    ஏனென்றால்,        1எம்டிபி   புலனாய்வு   குறித்த  நூலில்   மிகப்  பெரிய   செய்தியைக்   கூறப்  போகிறேன்.

“அது  செய்திக்குப்  பின்னே  உள்ள  செய்திகளை……..இந்த   ஊழலை  ஏன்,   எப்படி    ஆய்வு     செய்யத்   தொடங்கினேன்   என்பதை      விவரிக்கும்.  தைரியமான,    துணிகரமான   முயற்சிதான்”,  என   நேப்பாளில்     நடைபெறும்   ஆசிய   புலனாய்வு    இதழியல்   மீதான  மாநாட்டில்   கலந்துகொண்டிருக்கும்   ரியுசாசல்   மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.

சாபா,  சரவாக்கின்   வெட்டுமரத்   தொழில்   ஊழல்கள்    பற்றிய   செய்திகளையும்    அதில்   சேர்த்துக் கொள்ளப்  போவதாக    அந்த  பிரிட்டிஷ்   செய்தியாளர்    கூறினார்.

அவர்   நூலை   விரைவாக  வெளியிட     விரும்பினாலும்   இவ்வாண்டுக்குள்   எழுதி  முடிப்பது   சந்தேகம்தான்.

மலேசியர்கள்  நூலைப்    படிப்பதற்கு   வாய்ப்பிருக்குமா   என்று    வினவியதற்கு,     இணையத்திலும்    வெளியிடப்படும்    என்பதால்   நிச்சயம்  முடியும்   என்றார்