சமூக வலைத்தளச் செய்திகள் வேத உண்மைகள் அல்ல: ஜாஹிட்

dpmவெளிநாடுகளில்    உள்ள    மலேசிய  மாணவர்கள்     வெளிவரும்   செய்திகளைக்   குறிப்பாக    சமூக  வலைத்தளங்களில்    இடம்பெறும்   செய்திகளை   அப்படியே   நம்பிவிடக்   கூடாது    என்று   துணைப்  பிரதமர்    ஜாஜிட்   ஹமிடி   கூறினார்.   சொல்லப்படுவதெல்லாம்   உண்மைதானா  என்பதை   நுணுகி   ஆராய  வேண்டும்.

சமூக     வலைத்தளங்களில்   ஜிஎஸ்டி,  பெட்ரோல்   விலை,  மலேசியாவில்  உள்ள   வங்காள  தேசிகள்      போன்ற   விவகாரங்கள்     பற்றி   அடிக்கடி     பேசப்படுகிறது.

“வலைத்தளங்களில்   வலம்  வரும்   செய்திகளை   வேத  உண்மைகளாக  நினைத்து   சமுதாயம்   ஏமாந்து   விடக்   கூடாது”.    நியு  யோர்க்குகு  அலுவல்   பயணம்    மேற்கொண்டுள்ள   ஜாஹிட்  ஹமிடி,   அங்கு   மலேசிய   மாணவர்கள்   அடங்கிய   ஒரு  கூட்டத்தில்   உரையாற்றினார்.

அமெரிக்காவின்   கிழக்குப்     பகுதியில்    வசிக்கும்    சுமார்  65  மாணவர்கள்   கூட்டத்தில்   கலந்து  கொண்டார்கள்.

மாறுபட்ட    கருத்து   கொண்டிருப்பது    தவறல்ல.  ஆனால்,  மற்றவர்களின்  கருத்தையும்  மதிக்க   வேண்டும்   என்றாரவர்.