மகாதிரின் கையில் துப்புவேன், ஜமால் யூனுஸ்

 

arrestjamalமுன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டின் கையை குலுக்கி முத்தமிட்டதற்கான தாம் வருத்தப்படுவதாக சிவப்புச் சட்டை கும்பலின் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் கூறுகிறார்.

இப்போது அவரைச் சந்தித்தால் அவரது கையில் துப்புவேன் என்று ஜமால் அவரது ஆதரவாளர்களிடம் இன்று காப்பாரில் நடந்த ஒரு பெர்சே எதிர்ப்பு பேரணியில் ஜமால் கூறினார்.

மகாதிரின் நடத்தை ஒரு மூத்த தலைவருக்கு உகந்ததாக இல்லை. எதிரணியில் பார்ட்டி பிரிபூமி பெர்சத்துவின் பங்கையும் அது  பெர்சேக்கு அளிக்கும் ஆதரவையும் அவர் சாடினார்.

பெர்சத்து ஆதரவு கொடுத்தாலும் அது பெர்சேயிக்கு மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெற்றுத்தர முடியாது என்றாரவர்.

தாம் ஒரு இனவாதி அல்ல என்பதை வலியுறுத்திய வேளையில், பெர்சே 5 பேரணியில் “சீனா டிஎபி” நிறைந்திருப்பார்கள் என்று ஜமால் மேலும் கூறினார்.