ஜேபி சுல்தானா அமினா மருத்துவமனையில் தீ: அறுவர் பலி

fireஇன்று  காலை   ஜோகூர்   பாரு   சுல்தானா   அமினா   மருத்துவமனையில்    மூண்ட   தீயில்    அறுவர்    இறந்துகிடக்கக்  காணப்பட்டதைத்   தீயணைப்பு,  மீட்புத்துறை    உறுதிப்படுத்தியது.

“தீயில்  அறுவரை  மீட்டெடுத்தோம்-  ஒருவரை   உயிருடன்    ஐவரைப்  பிணமாக.

“மேலும்   ஒருவர்   தீயில்   சிக்கிக்கொண்டிருப்பதால்   மீட்புப்  பணிகள்   நடைபெற்று   வருகின்றன”,  என  அத்துறை   டிவிட்டரில்   கூறியிருந்தது.

பின்னர்  வந்த   டிவிட்டர்   செய்தி    தீயில்   சிக்கிக்கொண்டிருந்த   அந்த   மேலும்   ஒருவரும்   இறந்து  விட்டதாகக்   கூறியது.

மலேசியாகினிக்குக்  கிடைத்த    காணொளிகளும்   படங்களும்   மருத்துவமனையில்    அவசரப்  பிரிவை   அடுத்துள்ள   கட்டிடத்தின்   இரண்டாவது   மாடியில்   தீ  பற்றிக்    கொண்டிருப்பதைக்  காண்பித்தன.

தீவிர   கவனிப்புப்  பிரிவை(ஐசியு)ச்   சுற்றிலும்    கரும்புகை   சூழ்ந்திருந்தது.

மீட்புப்  பணிகள்  மேற்கொள்ளப்பட்டு   வருவதை   ஜோகூர்    பாரு   செலாதன்   ஓசிபிடி   சுலைமான்  சாலே    உறுதிப்படுத்தினார்.