மாணவர்களின் படுகொலை சம்பவத்தை கண்டித்து யாழில் பூரண ஹர்த்தால் : போக்குவரத்து உட்பட அனைத்தும் ஸ்தம்பித்தம்!

யாழில், பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை சம்பவத்தை கண்டித்து இன்று (25) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதனால் மருந்தகங்கள் தவிர்ந்த போக்குவரத்து உட்பட அனைத்தும் ஸ்தம்பித்தம் அடைந்துள்ளதாக அங்கிக்கும் எமது செய்தியாளர் கூறினார்.

இதேவேளை, அரச திணைக்களம் மட்டும் இயங்குவதாகவும் இருப்பினும் போக்குவரத்து ஸ்தம்பித்தம் அடைந்துள்ளதால் உத்தியோகஸ்த்தர் வருகை குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் கொக்குவில் குளப்பிட்டியில் கடந்த வியாழக்கிழமை இரவு பொலிஸாரினால் திட்டமிட்ட முறையில் மாணவர்கள் இருவரும் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: