மின்கம்பிகளில் ஏற்பட்ட தீப்பொறிகளே மருத்துவமனை தீ விபத்துக்குக் காரணமாம்

hospஜோகூர்  பாரு   சுல்தானா   மருத்துவமனை(எச்எஸ்ஏ)   தீவிர    கவனிப்புப்  பிரிவின்   தீ   விபத்துக்கு   மின்கம்பிகளில்   ஏற்பட்ட   தீப்பொறிகள்  காரணமாக    இருக்கலாம்  என   நம்பப்படுகிறது.

அதே   காரணத்தால்தான்     அடுத்த    நாள்   மருத்துவமனையில்     அறுவைச்  சிகிச்சை   பிரிவில்   மின்கசிவும்    ஏற்பட்டதாகக்  கூறப்படுகிறது.

மருத்துவமனையைப்  பராமரிக்கும்   பொறுப்பு   பந்தாய்   மெடிவெஸ்ட்   நிறுவனத்திடம்    ஒப்படைக்கப்பட்டிருப்பதாக   சுகாதார    அமைச்சர்   டாக்டர்   எஸ்.  சுப்ரமணியம்   கூறினார்.

மருத்துவமனை  பாதுகாப்பாக   உள்ளதை  உறுதிப்படுத்திக்  கொள்ளும்   பொறுப்பு   அதனுடையது.  அதற்காக   அடிக்கடி   சோதனைகள்   நடத்திப்  பார்க்க   வேண்டும்.  அதே  பணியைச்   செய்வதற்காக    அமைச்சிலும்   ஒரு  சிறப்புப்  பணிக்  குழு   இருப்பதாக   அவர்   சொன்னார்.