அம்னோவின் தோல்வி மலாய்க்காரர்களுக்கும் தோல்விதான் – அம்னோ நிர்வாகச் செயலாளர்

pmஅம்னோ   தோல்வி  கண்டால்   மலாய்க்காரர்கள்  அவர்களின்  கெளரவத்தையும்   இறையாண்மையையும்  இழப்பார்கள்     என்று   அக்கட்சியின்   நிர்வாகச்  செயலாளர்  அப்  ரவுப்  யூசோ    கூறியதாக   அறிவிக்கப்பட்டுள்ளது.

“இந்நாட்டில்   மலாய்க்காரர்கள்தாம்  பெரும்பான்மை    என்றாலும்  அரசியல்    அதிகாரத்தைப்  பொருத்தவரை   மலாய்க்காரர்கள்  சிறுபான்மையினராக  ஆகிவிடும்   அளவுக்கு   மலாய்  அரசியல்   வலிமை   பிரிந்து  கிடக்கிறது;  பலர்   இதை   உணர்வதில்லை”,  என  ரவுப்   நேற்றிரவு  புத்ரா  வாணிக  மையத்தில்   ஒரு   நிகழ்வில்    கூறியதாக   அம்னோ  ஆன்லைன்   குறிப்பிட்டுள்ளது.