சின்னாப்பின்னமாகுமா இலங்கை? – இலங்கைக்குள் ஊடுருவும் தீவிரவாதிகள்..! அடுத்தது என்ன??

terrorஇலங்கையில் மீண்டும் தீவிரவாதிகள் தலைதூக்கி வருகின்றார்கள், மேலும் இலங்கையை சின்னாப்பின்னமாக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றது என மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியினூடாகவே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், தீவிரவாதத்தை முற்றாக அழித்த ஒரே நாடு இலங்கை மட்டுமே. அந்த வெற்றியை பெற்றுக் கொடுத்த இராணுவத்தினர் இன்று முறையாக கவனிக்கப்படுவது இல்லை.

இராணுவ முகாம்களை அகற்றி வருகின்றார்கள் அத்தோடு தீவிரவாதிகளுக்கு ஏற்ற வகையில் நாட்டின் ஆட்சி நடந்து வருகின்றது.

அதேபோல தீவிரவாதிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நாட்டுக்குள் வந்து செல்லவும் அனுமதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அண்மையிலும் இரு தீவிரவாதிகள் கொழும்புக்கு ஊடுருவ முயன்று கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர். இதன் மூலமாக நாட்டுக்கு என்ன நடக்கப்போகின்றது என்பது தெளிவாகின்றது.

நல்லாட்சி தங்களது வாக்கு இலாபத்திற்காக நாட்டை பிளவு படுத்தப்போகின்றார்கள் நாம் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது இவற்றிக்கு எதிராக நாம் ஒன்றுதிரள வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: