மக்கி அழியும் நெகிழிப் பைகளுக்கு நல்ல வரவேற்பு

balanஜனவரி   முதல்   மக்கி   அழியும்   நெகிழிப்  பைகள்   அல்லது   காகிதப்   பைகளைத்தான்   பயன்படுத்த    வேண்டும்    என்ற   விதிமுறை  நல்ல   வரவேற்பைப்  பெற்றுள்ளது     என்று   கூட்டரசு     பிரதேச   துணை   அமைச்சர்    லோக   பாலன்    மோகன்   கூறினார்.

ஆனாலும்,   இன்னும்     சில     வணிகர்களும்     வியாபாரிகளும்    அந்த   விதிமுறையைப்  பின்பற்றவில்லை.     அதனால்   பாதகமில்லை,   அந்த  விதிமுறை   செப்டம்பர்   முதல்   தேதிதான்   முழுமையாக    அமலுக்கு   வருகிறது   என்றாரவர்.

இப்போதைக்கு    அந்த  விதிமுறையைப்   பயன்படுத்தப்பட    வேண்டியதன்    அவசியத்தை   எடுத்டுரைப்பதற்கே   முன்னுரிமை   கொடுக்கப்படுகிறது.

செப்டம்பரில்  விதிமுறை   முழுமையாக   அமலுக்கு   வரும்போது    அதைப்  பின்பற்றத்    தவரும்    வணிகளுக்கும்    வியாபாரிகளுக்கும்   ரிம2000 வரை   அபராதம்   விதிக்கப்படலாம்     என்று    கூட்டரசுப்   பிரதேச   அமைச்சு   அறிவித்துள்ளது.

-பெர்னாமா