‘இதுவே, மாற்றம் நிகழ ஏற்ற தருணம்’ அன்வார் இப்ராகிம்

anwarஅரசாங்கத்தில்   மாற்றம்  நிகழ    இதுவே    சரியான   தருணம்   என்றுரைத்த    பிகேஆர்   நடப்பில்   தலைவர்   அன்வார்   இப்ராகிம்,   14வது   பொதுத்   தேர்தலில்   எதிரணி    தோற்கும்     என்ற    அரசியல்   கணிப்பாளர்களின்   ஆருடங்களைப்  புறந்தள்ளினார்.

அரசியல்     ஆய்வாளர்கள்   இதே  கருத்தைத்தான்   2008-இலும்,  2013-இலும்    தெரிவித்தார்கள்    என்று   அன்வார்  கூறினார். அவர்   இன்று   ஒரு   வழக்குகாக   நீதிமன்றம்   வந்திருந்தபோது   கிடைத்த   நேரத்தில்     செய்தியாளர்களிடம்   பேசினார்.

“எதிரணியிடம்     அதற்கான    ஆற்றல்  உண்டு.  எல்லாருமே  சேர்ந்து   ஒத்துழைக்க    வேண்டும்.  இப்போதே  தொகுதிப்  பங்கீட்டுப்   பேச்சுகளைத்    தொடங்க   வேண்டும்.

“மாற்றத்துக்குச்   சரியான   நேரம்   இதுதான். (இப்போதைய   அரசாங்கத்தின்)  தவறுகள்   தொடர்வதற்கு    இடம்  கொடுப்போமானால்   அது  பெரும்  துயரமாக  முடியும்”,  என்றாரவர்.