நியாயங்கள் நீதியாவதில்லை !

man_writingநியாயங்கள் நீதியாவதில்லை !மனிதன் வசதிக்கு இன்னொருவன் வருவான். ஆய்வியலும் விலைக்குப்போவது வியப்பில் தமிழா ! நமது பாரம்பரை தவிக்குதா ?

தடை அதை உடை சரித்திரம் படைக்கலாம் ..நானல்ல கபாலி !

மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றி, பின் நடந்து உலகின் பல பகுதியை அடைந்த உண்மையைப் போல விலங்குகளும் பல பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளன.
இப்போது கிளம்பியுள்ள இனவாதிகள் கூறுவதுபோல, தமிழ்நாட்டு மாடுகளுக்கு என்று எந்த தனிச்சிறப்பும் இல்லை. எந்த வெளிநாட்டு மாடுக்கும் கூட அவ்வாறு சிறப்பு ஏதும் இருக்காது.

மரபியல் விஞ்ஞானத்தின்படி எந்த இனம் அதிக கலப்புக்கு உட்படுகிறதோ அதுவே சிறப்பான உயிரினமாக இருக்க முடியும். இந்தியர்கள் அதிக நோய்வாய்படுவதற்கும், அவர்களின் தோள்கள் வலிமையாக இல்லாமல் இருப்பதற்கும் காரணம் இந்தியாவின் அகமண திருமண முறையாகும். பல்வேறு சாதிகள், அதனுள் பல்வேறு உட்சாதிகள். அந்த உட்சாதிகளுக்குள் மட்டுமே கடந்த 3000 வருடங்களாக திருமணம் நடந்து வந்துள்ளது. இது இயற்கைக்கு விரோதமானதாகும். இந்தியர்களின் உடல் வலிமை மற்றும் நோய்தாங்கும் திறன் ஆகியவை மற்ற நாட்டவரை விட குறைவாக இருக்க இதுவே காரணம்.

மேற்கண்டவற்றைப் பொருத்திப் பார்க்கும் போது ‘நாட்டு மாடுகளை கலப்பு இல்லாமல் காப்பாற்றுவோம்’ என்பது வேடிக்கையானது ஆகும். மேலும் ஒரு உண்மையைச் சொன்னால் விஞ்ஞானத்தின்படி இப்போது நாட்டு மாடு என்று அறியப்படும் மாடுகள் கூட ஒரு வகையில் கலப்பு மாடுகளே! அவற்றின் ஜீன்களை ஆய்வுக்கு உட்படுத்தினால், 100% அது பல வெளிநாட்டு் மாடுகளுடன் ஒத்துப் போகும் வாய்ப்பு உள்ளது. அவை கலப்பு இல்லாமல் இருந்தால் அவை வேறு வேறு நிறத்தில் வேறு வேறு உயரத்தில் இருக்க வாய்ப்பில்லை.

இங்கே தமிழ்நாட்டு் மாடு என்று பெருமையாகக் கூறப்படும் மாடுகளின் மூதாதையர்கள் உண்மையில் சிங்களத்தில் இருந்து வந்ததாகக் கூட இருக்கலாம்.!!
மேலும் ஜெர்சி மாடுகளைப் பற்றியும் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. டென்மார்க்கிலிருந்து ஜெர்சி் மாடுகள் சென்னைக்கு வந்துள்ளதாகவும், அந்த நிகழ்வு ஜல்லிக்கட்டுக்குத் தொடர்புடையது எனவும் வாட்ஸ் அப்பில் செய்தி பரப்பப்படுகிறது. சென்னைக்கு மாடுகள் வந்துள்ளதா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் டென்மார்க் நாட்டைப் பற்றி் ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த நாடு மிக மிக வளர்ந்த நாடாகும். மனித வளர்ச்சி்க் குறியீட்டில் நான்காவது இடத்தில் டென்மார்க் உள்ளது. அந்த நாட்டு் மக்களின் சராசரி ஆயுட்காலம் 80 ஆகும்.

இந்தியாவை எந்த வகையிலும் டென்மார்க்கோடு ஒப்பிட இயலாது. இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 66.2 மற்றும் இந்தியா, மனித வளர்ச்சி குறியீட்டில் 130வது இடத்தில் உள்ளது. ஆகையால் டென்மார்க்கில் பிரபலமாக உள்ள அதிக பால் தரும் A1 ஜெர்சி பசுக்கள் மோசமானது என்றும், தமிழக A2 பால் தரும் பசுக்கள் நல்லவை என்றும் சொல்வது தர்க்கத்திற்கு எதிரானது.

நியாயமாக தமிழகத்தில் தற்போது A2 பாலுக்கு ஆதரவாக வாதிடுபவர்களின் கருத்துப்படி இந்தியாவில்தான் சராசரி ஆயுட்காலம் அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் சராசரி ஆயுட்காலம் குறைவாகவும், இவர்கள் குற்றம்சாட்டும் வெளிநாட்டு மாட்டின் பாலை அருந்துவோரின் ஆயுட்காலம் அதிகமாகவும் உள்ளது என்பது சிந்திக்க வேண்டியது. இது கௌதம புத்தர் ‘உண்மை சூரியன் போன்றது’ என்று கூற்றை நினைவூட்டுகிறது. மேலும் இந்த திடீர் விஞ்ஞானிகள் பசுவைப் பற்றியே கவலைபடுகின்றனரே ஒழிய எருமைகளைப் பற்றி ஏதும் கவலைப்படுவதில்லை.

எருமையின் பால் A1-ஆ அல்லது A2-வா என்பது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. இந்தியாவில் 60% க்கு மேல் எருமைப் பால் தான் புழக்கத்தில் உள்ளது. ஆனால் இது குறித்து யாரும் வாய் திறக்காதது ‘பசு புனிதமானது’ எனும் பார்ப்பனிய கருத்துக்கு அவர்கள் பலியாகிவிட்டதையே உணர்த்துகின்றது.

ஆகையால் போராடும் மாணவர்களே, தன் இனம் பெரியது, தன் மாடு் உயர்ந்தது, கலப்பு எங்கும் ஏற்படக் கூடாது என்பது போன்ற தூய்மைவாத கருத்துக்களுக்குப் பலியாகாமல், மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பது பற்றியும், மாநிலக் கலாச்சாரங்களை அழித்துவிட்டு இந்துப் பண்பாட்டை நிறுவும் காவி அரசியலைப் பற்றியும், ஜல்லிக்கட்டினால் தலித் மக்களின் மேல் தாக்குதல்கள் அதிகமாகிறது என்ற அரசின் ஆய்வறிக்கையையும், ஜல்லிக்கட்டில் உள்ள தீண்டாமையையும், உலகமயமாக்கல் பற்றியும், சமூகநீதி பற்றியும் நீங்கள் அறிய வேண்டும்.

மேலும் போராடும் மாணவர்கள் தமிழகத்தின் கிராமப்புற மக்கள் மற்றும் ஏழை எளியோர் கல்வி கற்பதையே தடுக்கும் மத்திய அரசின் ஏகாதிபத்திய ‘நீட்’ (NEET) தேர்வையும் சேர்த்து எதிர்த்து, மத்தியில் ஆளும் பார்ப்பனிய அரசுக்கு எதிராக தங்கள் போராட்டத்தை சரியான வழியில் திருப்ப வேண்டும் என்பது வெகுசன மக்களின் கோரிக்கையாகும்.
தற்போது ஆர்கானிக் என்ற பெயரில் மூன்று மடங்கு விலையில் காய்கறிகள், தானியங்கள் விற்கப்படுவதைப் போல மக்களை ஏமாற்ற ‘A2 பால்’ என்று பெருநகரங்களில் கடைகள் தோன்றி,

விரைவில் மூன்று மடங்கு விலையில் சாதாரண பாலை விற்கும் என்பது சான்றோர்களின்  ’அவதானிப்பு’  (கடசியில் தப்பிச்சன் பாருங்கள்.) இந்துத்துவா ஆசாமி !!!!

-தேடி எடுத்த ஆய்வியல் கட்டுரை,

இது பீட்டாவின் கூலியாகவும் இருக்கலாம் — படிக்க மட்டும்.