17ஆவது நாளாகவும் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம்

கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் இன்றோடு 17ஆவது நாளாகவும் தொடர்கின்றது

இந்த நிலையில் தமது போராட்டத்தினை நிறைவு செய்வதற்கு விரைவில் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என கேப்பாப்புலவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் எமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் இவற்றை குழப்ப நினைப்பவர்கள் விலகி நின்று எமது போராட்டத்தை வேடிக்கை பார்க்க வேண்டும் என தமது கருத்தினை முன்வைத்துள்ளனர்.

சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் சிகிச்சையின் பின்னர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளமையும் முக்கிய அம்சமாகும்.

இதேவேளை கேப்பாப்புலவு மக்களின் காணி மீட்பு போராட்டம் கடந்த மாதம் 31 ஆம் திகதி ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: