சிசிடிவி பதிவு கசிந்தது எப்படி? அமனா தலைவர் கேள்வி

amanahஜோங்-நாம்  கொலையைக்  காண்பிக்கும்   சிசிடிவி   கேமிரா   பதிவுகளை    அனைத்துலக  ஊடகங்கள்   பெற்றது    எப்படி    என்பதை    பார்டி   அமனா   துணைத்   தலைவர்   சலாஹுடின்    ஆயுப்   தெரிந்து  கொள்ள  விரும்புகிறார்.

“ஜோங்-நாம்  கொலையைக்  காண்பிக்கும்   சிசிடிவி   பதிவுகள்    வெளிநாட்டு   ஊடகங்களுக்குக்  கிடைத்து   அவை  ஜப்பான்,  சிங்கப்பூர்   போன்ற   நாடுகளில்   காண்பிக்கப்பட்டது   எப்படி   என்பதுதான்   கேள்வி?”,  என   சலாஹுடின்  இன்று   கோலாலும்பூரில்   கட்சித்   தலைமையகத்தில்    வினவினார்.

அதன்  விளைவாக    நாட்டின்  பாதுகாப்புமீது     அனைத்துலக    சமூகம்   கொண்டுள்ள   நம்பிக்கை    குறைந்து  போகுமே   என்றவர்   கவலை    தெரிவித்தார்.

பணம்  இருந்தால்    நாட்டில்   எதையும்  பெறலாம்போல்    தெரிகிறது    என்று  அந்த  அமனா  தலைவர்  குமுறினார்.