ஆந்திராவில் வெயிலின் தாக்கத்தால் 28 பேர் உயிரிழப்பு

andraஆந்திராவில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சித்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 113 டிகிரி வரை வெயில். வெயில் கொடுமையை தாங்க முடியாமல் இதுவரை பலர் இறந்துள்ளனர்.

இந்நிலையில், சுட்டெரிக்கும் வெயிலின் கொடுமையால் காளஹஸ்தி அடுத்த துப்பான்சென்டர் அருகே லட்சுமியம்மா(61), எம்எம்.கண்டிகா பகுதியில் முனியம்மாள்(75), கார்வேட்டை நகரம், அன்னூரு ஊராட்சி தரிசவாடாவை சேர்ந்த சத்தியனந்தம்மா(64), நாகலாபுரம் பிராமணர் வீதியை சேர்ந்த காமாட்சி(60) ஆகியோர் நேற்று முன்தினம் வெயிலால் இறந்தனர். இதேபோல் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 11 பேர், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 6 பேர், குண்டூரில் 7 பேர் என ஒரே நாளில் 28 பேர் உயிரிழப்பு.

-nakkheeran.in

TAGS: