கும்பலால் தாக்கப்பட்ட நவீன் மரணமடைந்தார்

 

Naveendiesஇளவயதினர் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்ட டி. நவீன் மூளைச் சாவு அடைந்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில் பினாங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் இப்போது இறந்து விட்டார்.

வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் அனுவார் ஓஸ்மான் அளித்த தகவலின்படி நவீன் இன்று மாலை மணி 6.00 அளவில் இறந்து போனார்.

கடந்த வெள்ளிக்கிழமை நவீன் பினாங்கு மருத்தமனையில் சேர்க்கப்பட்டார்.

நவீனின் நண்பர், 19 வயதான டி. பிரிவீன் முகத்தில் ஏற்பட்டுள்ள காயங்களுக்காக சிகிட்சை பெற்று வருகிறார்.

 

நீதி வழங்கப்படும்

இதனிடையே, பிரதமர் நஜிப், நவீன் மரணம் குறித்து அவரின் குடும்பத்தாருக்கு அவரது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

நீதி வழங்கப்படும். அவரை தாக்கியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நஜிப் அவரது செய்தியில் கூறியுள்ளார்.