ஹிண்ட்ராப் தலைவர் வேதா, அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார்

waytha-1அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் , ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தியின், சிரம்பான் அலுவலகத்தில் நுழைந்து அவரைத் தாக்கியுள்ளனர். அரசாங்கத்தைக் குறை சொல்வதை நிறுத்தி கொள்ளுமாறு, கழுத்தில் கத்தி வைத்து அவரை மிரட்டியுள்ளனர்.

இன்று மதியம், 3.50 மணியளவில் இச்சம்பவம் நடக்கையில் வேதமூர்த்தியின் மனைவியும் உடன் இருந்துள்ளார்.

வேதமூர்த்தியின் மனைவி அவரை ஒன்றும் செய்துவிட வேண்டாமென கெஞ்சியதாகவும், ஆனால், அவரும் தாக்கப்பட்டதாகவும் ஹிண்ட்ராப் வழக்குரைஞர் கார்த்திகேசன் சண்முகம் ஃப்.எம்.தி. இணையத்தளப் பத்திரிக்கையிடம் கூறியுள்ளார்.waytha-3

“வேதாவின் மனைவியைத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், அவரின் தங்கச் சங்கிலி மற்றும் கைத்தொலை பேசியையும் அவ்விருவரும் களவாடி சென்றனர்,” என கார்த்திகேசன் மேலும் கூறினார்.

மேலும், அலுவலகத்தில் துர்நாற்றம் வீசும் ஒருவகை திராவகத்தையும் அவர்கள் வீசி சென்றதாக அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் எதிர்க்கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது கூட,  இந்தத் திடீர் தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என வேதமூர்த்தி கூறினார்.